எமது கிராமத்தை பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற பசுமையான, அழகான கிராமமாக மாற்றி அமைப்போம்.

சபையினால் நாளைய தலைவர்களினை  உருவாக்குவோம் எனும் செயற்றிட்டத்தில் சென் ஜேம்ஸ் சன சமூக நிலையத்தின் ஊடாக கடற்கரை வீதியோரங்களில் சபையின் செயலாளர், சென் ஜேம்ஸ் நிலைய அங்கத்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சபை உத்தியோகத்தர்கள் இணைந்து  மரக்கன்றுகள் நாட்டப்பட்டு மாணவர்கள் மூலம் பராமரிப்பு கூடு அமைக்கப்பட்டது . சென் மேரிஸ் கல்லூரி  வெளிப்புற மதிலில் சூழலினை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் சுவரோவியம்  பாடசாலை மாணவர்களினால் சபையின் வழிநடத்தலுடன் வரையப்பட்டது .இச்செயற்றிட்டத்தில் நாளைய தலைவர்களாக மிளிரும் மாணவச் செல்வங்கள் தமது திறமைகளினை சிறந்த முறையில் செயல்படுத்தியிருந்தார்கள். சன சமூக நிலையத்தினருக்கும் மாணவர்களுக்கும் சபையின் செயலாளரினால் நன்றி தெரிவிக்கப்பட்டது .

IMG-20240229-WA0025
web1
web2
web4
web5