“கடற்கரை சுத்தப்படுத்தல் செயற்றிட்டத்தின் நடவடிக்கை திட்டம் – 2024”

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கண்ணகை அம்மன் இறங்குதுறை மற்றும் ஊர்காவற்றுறை இறங்குதுறை பகுதிகளில் "கடற்கரை சுத்தப்படுத்தல் செயற்றிட்டத்தின் நடவடிக்கை திட்டம் - 2024" இனை முன்னிட்டு சபையின் உத்தியோகத்தர்களால் பிளாஸ்ரிக் பொருட்களை அப்புறப்படுத்தும் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டபோது எடுக்கப்பட்ட சில பதிவுகள்.

434379327_3117532815045760_8777238355589194655_n
434401584_3117532735045768_2421596861292070509_n

உள்ளூராட்சி மாத நிகழ்வுகள் – 2023


உள்ளூராட்சி மாத நிகழ்வை முன்னிட்டு சனசமூக நிலையங்கள் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுகிடையில் அண்மையில் இடம்பெற்ற கிரிகெட் போட்டியில் அனலை தீவு மத்திய சனசமூக நிலைய அணி முதலாம் இடத்தை சுவீகரித்ததுடன் சபை அணி, காந்திஜி சனமூக நிலைய அணி என்பன முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்றன.

மேலும், சனசமூக நிலையங்கள் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுகிடையில் அண்மையில் இடம்பெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலைய அணி முதலாம் இடத்தை சுவீகரித்ததுடன் சபை அணி, அனலை தீவு சனமூக நிலைய அணி என்பன முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்றன. குறித்த போட்டிகள் இடம்பெற்றபோதான பதிவுகள்...

434092276_3115677868564588_4416427858008761856_n
434141919_3115679505231091_6618374080780530426_n
434119326_3115677641897944_2297572993154780893_n
434141721_3115678511897857_4541029957811557256_n
434141897_3115684158563959_3331153707279660187_n
434161299_3115684428563932_8408100896410678875_n
434162509_3115684455230596_6160151040810472145_n

 

பகிரங்க ஏல விற்பனை அறிவித்தல் – 25.03.2024

‼️பகிரங்க ஏலம் - ஊர்காவற்றுறை பிரதேசசபை ‼️‼️

🔘ஊர்காவற்றுறை பிரதேசசபையினால் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட பொருட்கள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை விற்பனை செய்யப்படவுள்ளது

☑️திகதி - 25.03.2024 (திங்கட்கிழமை)

☑️நேரம் - காலை 10.00 மணி

☑️இடம் - ஊர்காவற்றுறை பிரதேசசபை , தலைமை அலுவலகம்

433753561_3113365748795800_7473828310768279747_n

வடமாகாண உள்ளுராட்சிமன்றங்களுக்கான இணையத்தள அங்குரார்ப்பணமும் மெச்சுரை வழங்கல் நிகழ்வும் -01.03.2024


வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் இன்று (01.03.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  அவர்களினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.
உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் புதிய இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன,  உள்ளுராட்சி ஆணையாளர் எஸ். பிரணவநாதன், உதவி ஆணையாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இணையதள வடிவமைப்பில் ஈடுபட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்களுக்கு மெச்சுரை சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கௌரவ ஆளுநர் அவர்களினால் பிரதம விருந்தினருக்கான உரை நிகழ்த்தப்பட்டது.

p3
p4